"பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது" - 1,000 பேராசிரியர் விரைவில் நியமிக்க வாய்ப்பு என தகவல்
தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனால் 13 அரசு பல்கலைக் கழகங்களில் சுமார் ஆயிரம் பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் தகுதித் தேர்வு குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து உபரியாக உள்ள பேராசிரியர்களை மற்ற கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரப்ப முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து புதிய ஆசிரியர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.
Next Story