8 ஆண்டுகளாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு : தந்தி டிவி செய்தி எதிரொலியால் மூடப்பட்டது

ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சியில், கடந்த எட்டு ஆண்டுகளாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு, தந்தி டிவி செய்தியால் உடனடியாக மூடப்பட்டது.
8 ஆண்டுகளாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு : தந்தி டிவி செய்தி எதிரொலியால் மூடப்பட்டது
x
ஓமலூர் அருகே , சிக்கனம்பட்டி ஊராட்சியில், கடந்த எட்டு ஆண்டுகளாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு, தந்தி டிவி செய்தியால் உடனடியாக மூடப்பட்டது. குடிநீர் விநியோகத்துக்காக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாலையோரத்தில் 600 அடி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது குடிநீர் வற்றியதால்  கைவிடப்பட்ட அந்த ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. இந்த சாலை வழியாக பள்ளி குழந்தைகள் சென்று வரும் நிலையில், இதுகுறித்த செய்தி தந்தி டிவியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து துரித நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், இரும்பு தடுப்புகள் வைத்து ஆழ்குழாய் கிணற்றை மூடினர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்