ஜப்பான்- சென்னை இடையே நேரடி விமான சேவை : சென்னை வந்த விமானத்துக்கு உற்சாக வரவேற்பு
சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து சென்னைக்கு வாரந்தோறும் 3 நாட்கள் இந்த விமான சேவை இயக்கப்பட உள்ள நிலையில், முதல் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதற்கு சென்னை விமான நிலையத்தில் தண்ணீர் பாய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது, நேரடி விமான சேவையை இயக்குவதற்கு ஜப்பான் தூதர் கொஜிரோ உச்சியாமா அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story