நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - இருவர் கைது

திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத்.
நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - இருவர் கைது
x
திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில்  வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சுங்கச்சாவடி வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது, சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக வினோத்துக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வினோத் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்