102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 102 அடியை எட்டியது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 102 அடியை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து 18-வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வரும் நிலையில், பவானி ஆற்றின் கீழ்மதகுகள் மற்றும் நீர்ப்போக்கி மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுத்தப்பட்டுள்ளனர்.
Next Story