102 அடியை எட்டிய பவானிசாகர் அணை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 102 அடியை எட்டியது.
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
x
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 102 அடியை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து 18-வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வரும் நிலையில், பவானி ஆற்றின் கீழ்மதகுகள் மற்றும் நீர்ப்போக்கி மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்