"கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை" - நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
x
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கனமழையின் போது ஏற்படும் நிலச்சரிவை அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாத்திட முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை காரணமாக சிறப்பு மீட்பு படையினர் இன்று வர உள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்