மேட்டுப்பாளையம் : மலைரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தொடர் மழையால், கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலைரெயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
மேட்டுப்பாளையம் : மலைரயில் சேவை மீண்டும் தொடக்கம்
x
தொடர் மழையால், கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலைரெயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வந்த தொடர்மழையால் மேட்டுப்பாளையம்  - ஊட்டி மலைரெயில் பாதையில், அடர்லி, ஹில்குரோவ், ரெயில் நிலையங்கள் இடையே, 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்து ரெயில் பாதையின் குறுக்கே விழுந்தன. இதனால்,  கடந்த 18 ஆம்தேதி முதல் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனிடையே மழை குறைந்ததாலும், ரயில் பாதை சரி செய்யப்பட்டதாலும், ரயில் சேவை 3 நாட்களுக்கு பிறகு இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்