இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீன அதிபரை இந்திய பிரதமர் சந்தித்து பேச தமிழ்நாடே சிறந்த இடம் என்று மத்திய அரசு முடிவு செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக ஒருகிணைப்பாளர் பன்னீர் செல்வமும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை அரசியல் ரீதியாக தண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு சிறந்த வேலை வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும் என்று நினைப்பவர்களை அதிமுக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை அளித்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுகவினர் துடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்