சர்ச்சையான வாசகங்கள், போஸ்டர்களால் பதற்றம் - காவல்துறைக்கு சவால்?

கல்லூரி மாணவன் கொலைக்கு பழிதீர்க்க காத்திருக்கும் விதமாக ஒட்டப்பட்ட நினைவு நாள் போஸ்டர், மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது
சர்ச்சையான வாசகங்கள், போஸ்டர்களால் பதற்றம் - காவல்துறைக்கு சவால்?
x
மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரவீன் குமார் கடந்த ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  பிரவீன்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு , சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரவீன்குமார் கொலைக்கு பழி தீர்க்க காத்திருப்பது போல,  வாசகங்கள் அடங்கியுள்ள இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்