"குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்" - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா அத்திகுளம் கண்மாயில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா அத்திகுளம் கண்மாயில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், விதிகளை பின்பற்றி பணிகள் நிறைவேற்றப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அந்த பணியை செய்தவர்களுக்கு உரிய நிதியை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Next Story