பேருந்து மேற்கூரை மீது ஏற முயன்ற இளைஞர் - தட்டிக்கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்
சென்னையில் பேருந்தை சேதப்படுத்தியதோடு நடத்துநரையும் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மணலி செல்லும் பேருந்தில் ஏறிய 2 பேர், கூட்டம் அதிகமாக இருந்ததால் மேற்கூரையில் ஏற முயன்றனர். இதைப் பார்த்த நடத்துநர் ஆறுமுகசாமி இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பேருந்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு, நடத்துநர் ஆறுமுகசாமியையும் தாக்கினர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தாக்குதல் நடத்திய சுரேஷ் மற்றும் ஆகாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story