நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது - சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என்பது தொடர்பாக பதிலளிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது - சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்குகள்  நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிபிசிஐடி மேற்கொண்டுவரும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது மாணவர்களின் ஆடை, தலைமுடி வரை சோதனை செய்த அதிகாரிகள், முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்கள் என தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மோசடியில் சிக்கும் மாணவர்களின் புகைப்படங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிட கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை  சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது என்பது குறித்து பதிலளிக்க சிபிஐ க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்