ரூ.11 லட்சம் செலவில் 19 ஆயிரம் அப்துல் கலாம் புத்தகங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை தனது சொந்த முயற்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை தனது சொந்த முயற்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினார். அப்துல் கலாம் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் எழுதிய ' என் வாழ்வில் திருக்குறள் ' என்கிற நூலின் முக்கிய பகுதிகள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. இந்த புத்தகங்கள் தனது சொந்த முயற்சியில் அச்சடிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கூறினார்.
Next Story