பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறப்பு

பாசனத்திற்காக பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறப்பு
x
பாசனத்திற்காக பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 120 நாட்களுக்கு மொத்தம்  ஆயிரத்து 37 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தாம் அணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்