ராஜீவ் காந்தி குறித்து சீமான் பேசிய விவகாரம் : அறிக்கை அளிக்க விழுப்புரம் ஆட்சியருக்கு உத்தரவு

விக்ரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தி மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
விக்ரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தி மரணம் குறித்து  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியை தேர்தலில் ​போட்டியிட அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய விழுப்புரம் ஆட்சியருக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஆட்சியரின் அறிக்கை கிடைத்ததும், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்