சூப்பர் மார்க்கெட்டில் 'செண்ட்' பாட்டில் திருட்டு - கணவன், மனைவியாக நடித்த இருவர் கைது

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில், கணவன், மனைவியாக நடித்து செண்ட் பாட்டில் திருட்டில் ஈடுபட்ட இருவர் பிடிபட்டனர்.
சூப்பர் மார்க்கெட்டில் செண்ட் பாட்டில் திருட்டு - கணவன், மனைவியாக நடித்த இருவர் கைது
x
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில், கணவன், மனைவியாக நடித்து செண்ட் பாட்டில் திருட்டில் ஈடுபட்ட இருவர் பிடிபட்டனர். டிரங்க் சாலையில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் நுழைந்து கடந்த மாதம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாசனை திரவிய பாட்டில்களை இருவர் அள்ளிச் சென்றனர். சிசிடிவி காட்சி மூலம் தேடிவந்த நிலையில், மீண்டும் கடைக்கு வந்த அவர்களை கடை உரிமையாளர் மடக்கிப் பிடித்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த நாகப்பன் மற்றும் லட்சுமி என்பது தெரியவந்தது. போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் சிறையில், அடைக்கப்பட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்