திருநங்கையுடன் திருமணம் செய்தவர் - பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

மதுரையில் திருநங்கையை திருமணம் செய்த ஒருவர், பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.
திருநங்கையுடன் திருமணம் செய்தவர் - பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்
x
மதுரையில் திருநங்கையை திருமணம் செய்த ஒருவர், பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். மதுரை சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச்  சேர்ந்தவர் பஷீர். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்த திருநங்கை கல்கியை பஷூர், காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தங்களுக்கு  பாதுகாப்பு தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்