கொடைக்கானலில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த‌தால், மனைவியை கொன்றுவிட்டு, வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்
x
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையை சேர்ந்த வினோத்குமாருக்கும் மதுரையை சேர்ந்த ஜெனிபர் என்ற ஈஸ்வரிக்கும் ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. வியாழக்கிழமையன்று துணி துவைக்கும்போது தனது மனைவி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக மாமனாருக்கும் போலீசுக்கும் வினோத்குமார் தகவல் கொடுத்துள்ளார். 
சம்பவ இடத்துக்கு வந்து ஜெனிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு, ஜெனிபர் வழுக்கி விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என சந்தேகம் அடைந்தனர். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதை அறிந்த வினோத்குமார், அங்கிருந்து நழுவி  வில்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண‌டைந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று வினோத்குமாரை பிடித்து விசாரணையை மேற்கொண்டனர். அதில் அத்தை மகளான வேளாங்கண்ணியுடன் சேர்ந்து, வினோத்குமார், ஜெனிபரை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வேளாங்கண்ணியை பிடித்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். தனது கணவர் இறந்துவிட மாமன் மகனான வினோத்குமாருடன், குடும்பம் நடத்தி வந்துள்ளார் வேளாங்கண்ணி.  இந்தநிலையில் ஜெனிபரை கரம்பிடித்த வினோத்குமார், வேளாங்கண்ணியை விட்டு விலகி உள்ளார். இதையறிந்த வேளாங்கண்ணி, வீட்டிற்கு சென்று வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட, இதுதொடர்பாக கொடைக்கானல் மகளிர் காவல்நிலையத்தில் ஜெனிபர் புகார் அளித்துள்ளார். போலீசார் தலையிட்டு, வேளாங்கண்ணியை பிரித்து வைத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வேளாங்கண்ணி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ஜெனிபரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.அதன்படி வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த ஜெனிபருடன் தகராறில் ஈடுபட்ட வேளாங்கண்ணி, ஒரு கட்டத்தில் அவரை தரையில் தள்ளி வாயை பொத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த வினோத்குமார்,  ஜெனிபரின் கை கால்களை பிடித்து கொள்ள அவரது வாய் மற்றும் மூக்கை இறுக மூடியுள்ளார் வேளாங்கண்ணி. இதில் மூச்சுத் திணறி, வாயில் ரத்தம் வந்த நிலையில் ஜெனிபர் உயிரிழந்துள்ளார். பின்னர், இந்த கொலையை மறைக்க வினோத்குமாரும், வேளாங்கண்ணியும் சேர்ந்து நாடகமாடியது தெரியவந்ததும், இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே வினோத்குமார் ஏற்கனவே கீர்த்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்றுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விவாகரத்து கொடுத்த‌தால், கீர்த்தனாவின் உயிர் தப்பியது , சேர்ந்து வாழ விரும்பியதால் ஜெனிபரின் உயிர் பறிபோயுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் அவரது உறவினர்கள்

Next Story

மேலும் செய்திகள்