தூத்துக்குடி : நடுரோட்டில் இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு
தூத்துக்குடியில் வேலு என்பவர், தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேலு என்பவர், தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். ஹெல்மெட் இல்லாமல் சென்றபோது போலீசார் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த வேலு, இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இதை மறுத்துள்ள போலீசார், வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் வேலு, அந்த வாகனத்தை எரித்ததாக கூறுகின்றனர். இதனிடையே, வாகனத்தை எரித்துவிட்டு, தப்பி ஓடிய வேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story