தேனியில் தொழிலதிபர் வீட்டில் 280 சவரன், ரூ. 2 லட்சம் கொள்ளை
தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 280 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த தொழிலதிபரான கோகுலகிருஷ்ணன் இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கோகுல கிருஷ்ணனுக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் ஊர்திரும்பிய கோகுலகிருஷ்ணன் நகை - பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணருடன் வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பீரோவில் இருந்த 280 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் ஆகியவற்றை மர்மநபர்கள் அள்ளிச் சென்றது தெரியவந்தது. வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பூட்டை உடைத்து இந்தக் கொள்ளை நடைபெற்றுள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story