"ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான மோடியின் கருத்துக்கு வரவேற்பு" - கே.எஸ்.அழகிரி

ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நம் நாட்டில் வேறுபாடு வராமல் பிரதமர் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
x
ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நம் நாட்டில் வேறுபாடு வராமல், பிரதமர் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். சென்னை  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கம் வருவதற்கு இந்தியா பாடுபடும் என்ற பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் மொழி தொடர்பான பிரதமரின் கருத்தை வரவேற்பதாகவும், மொழியை திணிக்கும் போது எதிர்ப்பும் மறுப்பும் வரும் என்றும், அதை தான் தற்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. எதிர் கொள்வதாக தெரிவித்தார். நாங்குநேரி தொகுதியில் நாளை மறுநாள் முதல் ஒரு வாரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து  விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்