உலகின் தொன்மையான மொழியான தமிழின் தாயகம் - பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கும், நவீன மொழியான சென்னை ஐ.ஐ.டி.க்கும் தாயகம் தமிழ்நாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகின் தொன்மையான மொழியான தமிழின் தாயகம் - பிரதமர் மோடி பெருமிதம்
x
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்​ட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவின் எதிர்க்காலம் இங்குள்ள மாணவர்களின் கண்களில் தெரிவதாகவு​ம், உங்களை இங்கு கொணர்ந்த பெற்றோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவர்களை கேட்டுக் கொண்டார். உலக அளவில் பிராண்ட் இந்தியாவை உருவாக்குவதில் முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர்களின் பங்களிப்பை வெகுவாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்