ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11 வரை நீதிமன்ற காவல்

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
x
ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு, வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் 16 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார்.  பேனர் வைத்தது தமது தவறு தான் என நீதிபதி முன் ஜெயகோபால் ஒப்புக்கொண்டார். 
 அவரை அக்டோபர் 11 ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்