தொடங்காத சாலை பணி : எம்.பி-யின் கேள்விகளால் அதிகாரிகள் திணறல்

அரூர் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சேலம் - வேலூர் நெடுஞ்சாலையை சீரமைப்பதற்கான பணிகள் ஏன் தொடங்கப்பட வில்லை? என, அதிகாரிகளிடம், தருமபுரி எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.
x
அரூர் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சேலம் - வேலூர் நெடுஞ்சாலையை சீரமைப்பதற்கான பணிகள் ஏன் தொடங்கப்பட வில்லை? என, அதிகாரிகளிடம், தருமபுரி எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார். அயோத்தியபட்டினம் முதல் பள்ளிப்பட்டி வரை சாலையை சீரமைப்பதற்கான ஒப்பந்தம், கடந்த பிப்ரவரி மாதம் கையெழுத்தானது. 7 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்காத நிலையில்,  சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், அத்தொகுதி எம்.பி செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலை பணிகள் தொடங்கப்படாதது குறித்தும், ஆய்விற்கு ஒப்பந்ததாரர் வராதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க முடியாமல், அதிகாரிகள் திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்