கடனுக்கு பதிலாக ஆசைக்கு இணங்க வற்புறுத்தல் : பெண் வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

கடனுக்கு பதிலாக ஆசைக்கு இணங்குமாறு இளம்பெண்ணை வற்புறுத்தியதாக டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஒருவர் கைதாகியுள்ளார்.
கடனுக்கு பதிலாக ஆசைக்கு இணங்க வற்புறுத்தல் : பெண் வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது
x
கடனுக்கு பதிலாக ஆசைக்கு இணங்குமாறு இளம்பெண்ணை வற்புறுத்தியதாக டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஒருவர் கைதாகியுள்ளார். சென்னையைச் அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முத்துக்குமார், தன் வீட்டின் அருகே உள்ள பெண்ணிடம் பணம் கடனாக கொடுத்த‌தாக தெரிகிறது. பல முறை கேட்டும் இளம்பெண் பணத்தை திரும்ப த‌ராத‌தால், ஒருகட்டத்தில் பணத்திற்கு பதிலாக தன் ஆசைக்கு இணங்குமாறு பெண்ணை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் புகார் அளித்த‌தை தொடர்ந்து, முத்துக்குமாரை கைது செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்