வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பாக மோதல் : சு​ங்கச்சாவடி ஊழியர் மீது மர்மநபர் தாக்குதல்

வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பான மோதலில், செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பாக மோதல் : சு​ங்கச்சாவடி ஊழியர் மீது மர்மநபர் தாக்குதல்
x
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடிக்கு, நேற்று நாம் தமிழர் கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று வந்துள்ளது. அப்போது, வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பாக காரில் இருந்தவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் காரில் இருந்த ஒருவர்,  சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதுடன், தனது கைகளால் அங்கிருந்த கண்ணாடியை உடைத்துவிட்டு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் ஊழியரை தாக்கிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்