ஸ்டண்ட் யூனியன் அலுவலகம் முன்பு போராட்டம்
ஸ்டண்ட் யூனியன் அலுவலகம் முன்பு போராட்டம்-பணி வழங்க மறுப்பதாக புகார்,போலீசார் விசாரணை
சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் தலைமை அலுவலகத்தில் அச்சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விக்னேஷ், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட 9 பேர் தமது குடும்பத்தினருடன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காழ்ப்புணர்வு காரணமாக தங்களுக்கு பணி தர மறுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் கூறினர்.
Next Story