"விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்

பேனர் விவகாரத்தில் இனியாவது திருந்த வேண்டும் என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
பேனர் விவகாரத்தில் இனியாவது திருந்த வேண்டும் என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு, பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குறித்தும் அப்போது அவர் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்