திண்டிவனம் : தேர்வுக் கட்டணம் உயர்வைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கல்லூரியில், தேர்வுக் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் : தேர்வுக் கட்டணம் உயர்வைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கல்லூரியில், தேர்வுக் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தாள் ஒன்றுக்கு 68 ரூபாயாக இருந்த தேர்வுக்கட்டணம், திடீரென நூறு ரூபாயாக உயர்த்தப்பட்டதாக கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்