தடை செய்யப்பட்ட ஜர்தா பறிமுதல் - திண்டிவனம் போலீசார் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட ஜர்தா என்ற புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட ஜர்தா என்ற புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் இருந்து நூதன முறையில் ஜர்தா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெங்காய மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ ஜர்தாவை பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் மணி என்பவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story