சென்னை : திடீரென தீப்பிடித்த கார் - கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய பயணிகள்

போக்குவரத்து மிகவும் நெரிசலான சென்னை அண்ணா சாலையில் கார் ஒன்று தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : திடீரென தீப்பிடித்த கார் - கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய பயணிகள்
x
பாண்டிச்சேரியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான காரை, ஓட்டுநர் பெருமாள்சாமி சவாரிக்காக சென்னை ஓட்டி வந்துள்ளார். பயணிகளுடன் அண்ணா சாலையில் சென்ற கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வந்துள்ளது, உடனடியாக அனைவரும் காரில் இருந்து இறங்கிய சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது, தகவலறிந்து வந்த அண்ணாசாலை தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து அண்ணா சாலை போக்குவத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

Next Story

மேலும் செய்திகள்