கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனை ரத்து - மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை
கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரு கல் உடைக்கும் ஆலைகளுக்கு இடையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு, நிபந்தனையை தளர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
Next Story