காவேரி கூக்குரல் இருசக்கர வாகன பேரணி ஒசூர் வந்தது - ஜகி வாசுதேவ் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், ஜகி வாசுதேவ் குழுவினர் மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி ஒசூர் வந்தடைந்தது.
காவேரி கூக்குரல் இருசக்கர வாகன பேரணி ஒசூர் வந்தது -  ஜகி வாசுதேவ் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு
x
காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், ஜகி வாசுதேவ் குழுவினர் மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி ஒசூர் வந்தடைந்தது. காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும், விவசாயிகளை மேம்படுத்தும் வகையிலும் ஈஷா யோகா மையம் சார்பில் ஜகி வாசுதேவ் இந்த பேரணியை தொடங்கி வைத்திருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, மாநில எல்லையை கடந்து தமிழகத்தில் ஒசூர் வந்தடைந்த போது, பாஜக இளைஞர் அணி தேசிய துணைத்தலைவர் ஏ. பி. முருகானந்தம் உள்ளிட்ட பிரமுகர்கள், வரவேற்றனர். இந்த பேரணி, தர்மபுரி வழியாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்