வகுப்பறையில் பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை: தற்கொலைக்கு காரணம் என்ன..? - போலீசார் விசாரணை

மதுரையில் வகுப்பறையில் பள்ளி மாணவி தற்கொலை செ​ய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை: தற்கொலைக்கு காரணம் என்ன..? - போலீசார் விசாரணை
x
மதுரை புதூரை சேர்ந்த மாணவி அர்ச்சனா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்குச் செல்வதாக கிளம்பி சென்ற மாணவி அர்ச்சனா வகுப்பு அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த புதூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வர தாமதம் ஆன நிலையில், மறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்த செல்ல வைத்தனர். மாணவி தற்கொலை தொடர்பாக நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஒரு வாரமாக சோர்வுடன் இருந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து  பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்