எரிசாராயம், கஞ்சா பதுக்கி வைத்த கணவன், மனைவி கைது

திண்டிவனம் சஞ்சீவராயன்பேட்டையில், எரிசாராயம் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்த கணவன் மனைவியை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எரிசாராயம், கஞ்சா பதுக்கி வைத்த கணவன், மனைவி கைது
x
திண்டிவனம் சஞ்சீவராயன்பேட்டையில், எரிசாராயம் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்த கணவன் மனைவியை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். மணிகண்டன் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா, சாராயம் மற்றும் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, திண்டிவனம் ஆய்வாளர் சீனி பாபு தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மணிகண்டன் வீட்டின் பின்புறம் 350 லிட்டர் எரிசாராயம்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் கீர்த்தனா, ராஜாங்குளம் ஆஞ்சநேயர் கோவில் அருகே, மறைத்து வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்