மயிலாடுதுறைக்கு வந்தடைந்த காவிரி நீர் - கிளை ஆறுகளில் நீர் திறந்ததால் தாமதம் என புகார்
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் 25 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறை வந்து சேர்ந்தது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் 25 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறை வந்து சேர்ந்தது. மேட்டுர் அணையில் இருந்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, நாகை மாவட்ட எல்லையான திருவாலங்காடு சட்ரஸ் வந்தடைந்தது. விதிகளின்படி காவிரியில் திறக்கப்படும் தண்ணீர், கடைமடை பகுதியான பூம்புகார் சென்று சேர்ந்த பின்னரே, கிளை ஆறுகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், ஆனால், திருவாலங்காட்டில் இருந்து கிளை ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மயிலாடுதுறைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story