மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆசிரியர் : ஆசிரியர் தினத்தன்று நடந்த சம்பவத்தால் பரபரப்பு

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர் ஆசிரியர் தாமஸ்.
மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆசிரியர் : ஆசிரியர் தினத்தன்று நடந்த சம்பவத்தால் பரபரப்பு
x
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர் ஆசிரியர் தாமஸ். ஆசிரியர் தினமான இன்று தாமஸ் மதுபோதையில் தள்ளாடிய படி பள்ளிக்கு வந்தார். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், போலீசாரிடம், தாமஸ் ஒப்படைக்கப்பட்டார். ஆசிரியர் தினமான இன்று, மாணவர்களுக்கு நன்னெறி போதிக்கும் ஆசிரியர் ஒருவரே இதுபோல் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்