மீன்பிடி தடை காலத்தில் வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிட கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீன்பிடி தடை காலத்தில் வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிட கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிட கோரி  மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தடைகாலத்தை 45 நாளில் இருந்து 61 நாளாக அதிகரித்த போதும் 5 ஆயிரம் ரூபாய்  மட்டுமே வழங்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒரு நாளைக்கு 81 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுவதாகவும், அதை 500 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மீனவர்களுக்கு உதவி தொகையை அதிகரிப்பது தொடர்பாக அக்டோபர் 16ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்