கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் - புகாரின் பேரில் விசாரணை நடத்தும் போலீசார்

சென்னையில் கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்து சென்னை மாநகர போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் - புகாரின் பேரில் விசாரணை நடத்தும் போலீசார்
x
சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன், நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து போலீசார், குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இது குறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் பரமேஸ்வரன் நந்தினி தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல் துறை இணை ஆணையர் ஜெயகெளரியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்