பாடலாசிரியர் தாமரையை பாராட்டிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

இளைஞர்கள் தங்களுக்குள் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருவது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
பாடலாசிரியர் தாமரையை பாராட்டிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
இளைஞர்கள் தங்களுக்குள் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருவது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், அகராதியியல் விழிப்புணர்வு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாடலாசிரியர் தாமரை தமது பாடல்கள் ஒவ்வொன்றிலும், ஏதாவது ஒரு வழக்கொழிந்த தமிழ்ச் சொல்லை பயன்படுத்தி வருவது, வரவேற்கத்தக்கது என்றார்.
முன்னதாக, புதிய கலைச் சொற்களை உருவாக்கிய மாணவிகளுக்கு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்