"தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியது" -எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு மக்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு மக்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் 40 இருக்கைகளை கொண்ட புதிய மின்சார பேருந்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளதாக கூறினார். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரத்து 93 கோடி நிலுவைத்தொகை, விரைவில் வழங்கப்படும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
Next Story