காவலர் தேர்வு எழுதிய செயின் பறிப்பு கொள்ளையன்...
மதுரையில் தேர்வு எழுதிய பிரபல செயின் பறிப்பு கொள்ளையனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மதுரையில் தேர்வு எழுதிய பிரபல செயின் பறிப்பு கொள்ளையனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் மீது பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு, காவல்துறையினர் விஜயகாந்த்தை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வில் விஜயகாந்த், பங்கேற்று எழுதிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர் தேர்வு எழுதியதும் அவரை கைது செய்தனர்.
Next Story