ஆக. 28 - ல் வெளிநாடு புறப்படுகிறார் முதல்வர் - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 28 ம் தேதி வெளிநாடு புறப்படுகிறார்.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 28 ம் தேதி, வெளிநாடு புறப்படுகிறார். இதனை, தமிழக அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமது பயணத்தில் முதலாவதாக அமெரிக்காவின் கலிபோர்னியா கால்நடை பண்ணையை பார்வையிடுகிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பும்வழியில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் துபாய் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு, தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பின்னர், 10 ஆம் தேதி  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்புவார் என்றும், தொழில் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் மேற்கொள்வதாகவும், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்