பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியில் பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிழந்தனர்.
பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
x
விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியில் பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிழந்தனர். மேட்டமலை பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. நேற்று மாலை காரில் கொண்டுவரப்பட்ட பட்டாசுகளை, ஊழியர்கள் இறக்கியபோது பட்டாசுகள் இடையே உராய்வு ஏற்பட்டதால், பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ரமேஷ், தர்மர் ஆகியோர் உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு பற்றி எரிந்த தீயை அனைத்தனர். வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்