நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
x
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு  திருச்சியில்  நடைபெற்றது. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட இம்மாநாட்டின் நிறைவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன், மாநிலங்கவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மக்களவை உறுப்பினர்கள் வெங்கடேசன், ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். புதிய தேசிய கல்வி கொள்கையை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் பேசிய நாராயணசாமி, புதிய கல்வி கொள்கை மூலம் தமிழ் மொழியை குழிதோண்டி புதைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு  கனவு சிதைந்து போனதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்