தேனி கூட்டத்தில் துரைமுருகன் - ரவீந்திரநாத் குமார் சந்திப்பு

தேனியில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் சந்தித்து பேசினர்.
x
தேனியில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் சந்தித்து பேசினர். மாற்று கட்சியினர் உடன் நட்பு பாராட்டும் அரசியல் தலைவர்களில், திமுக பொருளாளர் துரைமுருகன் மிக முக்கியமானவர். திமுக கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிப் பேசியதே அதற்கு சிறந்த உதாரணம். இந்த நிலையில், தேனியில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர், துரைமுருகன் மற்றும் ரவீந்திரநாத் குமார் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்