ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மத்திய தலைமை தபால் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், சிபிஐக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முன்ளாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு :
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட காரைக்குடியில் காங்கிரஸ் தொடண்டர்கள் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வரும் அவர்கள், ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்தனர். இதனையடுத்து காரைக்குடியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story