நீலகிரி கனமழை பாதிப்பு : நிவாரண நிதியை உயர்த்த வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று திருப்பூா் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று திருப்பூா் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக குற்றம்சாட்டிய அவர், இதனை கண்டித்து தொழிலாளர்கள் ஒரு மாத காலம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார். தொடர்ந்து கனமழையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை 25 லட்சமாக உயர்த்தி வழங்க கோரியும் அவர் வலியுறுத்தினார்.
Next Story