முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ்...
தமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இளந்தமிழர் இலக்கிய பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், தமிழ்ச் பேச்சாளரும், பேராசிரியருமான ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ், தமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாகவும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
Next Story