மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்

கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்
x
கோவை சோப்பு கம்பெனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கமணிகுமார் -  மீனா தம்பதியினரின் மகள் ஷாலினியை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக ராஜேந்திரன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஷாலினி அவரது அம்மா வீட்டில் இருந்த போது ஷாலினியை வீட்டிற்கு வருமாறு ராஜேந்திரன் அழைத்துள்ளார். அப்போது மாமியார் மீனா ஷாலினியை அனுப்ப மறுத்த மாமியார் மீனாவை ராஜேந்திரன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தங்கமணிகுமார், ராஜேந்திரனிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது  தான் வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை தங்கமணி குமார் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேந்திரனை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், தங்கமணி குமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்